Monday, July 22, 2013

மண்

வறண்டு
இறுகிப்போன பூமியின் மேல்
பொழிந்தது
மேலே குவிந்துநின்ற கருணை.
மண்வாடை தன் மீது கமழ
குதூகலித்த மனிதனின்
கூர் கலப்பை
வறண்டு இறுகி தன் பிறப்பை மறந்த
மண்ணைக் கிளறியது.
காற்று தீண்டிய சுதந்திர தலத்தில்
உயிர்த்தெழுந்து
சிலிர்த்ததொரு மண்துகள் ஒன்று
தன்னை உணர்ந்தது, பூமியாகியது.
உயர்ந்து குவிந்து நின்ற அக் கருணையின்
மழை வித்துக்களை ஏற்று
சுபிட்சம் மலர்ந்திற்று

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP