Tuesday, July 23, 2013

இருப்பும் இன்மையும்

வீதி பார்த்த
கதவை அடைத்து விட்டுத்தான்
சாப்பிட உட்காருகிறேன்

வெளிறி மரித்த பிணக்குவியலென
சோற்றுப் பருக்கைகள்

நான் இன்னும்
வரிக்காத எனது மனைவியும்
பெறாத எனது குழந்தைகளும்
பசித்து
மரித்துப் போன என் சகாக்களோடு
உடற்பிச்சை கேட்டு
கதவுதட்ட
தட்டத் தட்டத் திறவாமல்
விழுங்கி வைக்கிறேன்

தட்டு கழுவிய எச்சித் தண்ணீரை
தென்னை மரம் ஏற்றுக் கிளுகிளுக்கும்
எஞ்சிய பருக்கைகள் புன்னகைக்கும் தூரடியில்
ஒரு பாடலெனப் பறந்துவந்த சிட்டுக் குருவி
அக்கம் பக்கம் பார்த்துவிட்டுக்
கொத்தி மறையும்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP