Friday, July 26, 2013

வேளைகள்

வெயில் பாவுபோடும்
மார்கழியில்
கூதல் காற்றே ஊடாய்ப்
பாய்ந்து பாய்ந்து
நாள்தறி நடக்கும்

இரவுச் சேலையில்
அபாரம்! அபாரம்!
எத்தனை சித்ர வேலைப்பாடு!

விற்பதற்கு முன்
நிலவுப்பெண் முகமெல்லாம்
பொங்கப் பொங்க
உடுத்துப் பார்க்கிறாள்

நேரமிஃதில்
நெய்தவரைக் காணோம்
வாங்குவாரையும் காணோம்

கவிதைத் துவாரம் வழி நோக்கும்
கள்ளப் பயலே!
கதவை அடைத்துக்கொண்டு
அவள்
தன்னழகு பார்க்கும்
தனிமைப் பொழுது இது!
உன் சந்தையிலே காண
முடியாதது

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP