Tuesday, July 9, 2013

கரையான் ஏறும் பனைகள்

வேண்டாம்.
சொரணையற்ற தன்மையைக் கூட
யாரும் ஏச வேண்டாம்.
மனசின்
சொரணையற்ற பகுதி கூட
சொரணை மிகுந்த மிக மென்மையான
பகுதியைப் பயந்து போய்க்
காபந்து பண்ணுகிற உஷாராய்தானே இருக்கிறது!

நெஞ்சைக் கொட்டி வரைந்த
ஓவியமாய்க் கரையான் ஏறும்
பனையேறி ஏறி இறங்காத
பனைகளில்.
இதோ பாருங்கள்;
வேண்டாம்,
கை வைக்க வேண்டாம்.
அடடா!
நான் சொன்னது கேட்கலியா நீங்க!
உயிர்பாசம் கொண்டு
பரபரக்கும் கரையான்கள்...
சொரணை மிகுந்த மனசின்
மிக மெண்மையான பகுதி.

இப்பொ புரிகிறதா
சொரணை மிகுந்த மிக மென்மையான
மனசு
சொரணையற்றுப் போகும் விதம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP