Friday, July 12, 2013

ஒரு சாயங்காலம்...

குளியலறை விடியலில்
மேனியலங்கங்கே பூத்த
பனித் துளிகளை உண்டு
ஈரமாகும் துவாலை
’சூடிக் கொடுக்கச்
சூடும் மாலை’யென
அணியும் சட்டை
மாலைக் காற்றில்
விடுபட்டுப் பித்தேறி
முகத்தை எட்டி தீண்டியாடும்
நீள வளர்த்த சிகை
ஒதுக்கும் விரல்களில்
பூக்கும் ஒரு பெண்மை
உன் நினைவு

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP