Monday, August 19, 2013

கடலின் பெருங்குரல்

கடலின் பெருங்குரல் இடையறாது
நிலத்தை நோக்கிச் சொல்வதென்ன?
புரியவில்லை. மண்புயல்
பூமியைப் புரட்டிப் புரட்டித் தேடியது.
திடீரென மலையின் ஊற்றுத் திறந்து
ஓடிவந்தது கடலை நோக்கி
வழியெல்லாம் மண்புயல் அடங்கியது
பூமியின் புதையல்கள் மேலெழும்பி மலர்ந்தன
கடல் ஆரவாரித்து ஊக்குவித்தது பூமியை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP