Saturday, August 24, 2013

துயரங்கள் பற்றி

இந்த மரத்தையும் என்னையும்
ஒன்றாய்ப் பிணைப்பது எது?
வேறு வேறாய்ப் பிரிப்பது எது?

லோடு லாரிகள் போகும்போதெல்லாம்
வலித்து இழுத்து இம்சித்துவிட்டுப் போகின்றன
இம்சைப்படுவது எது?

தறிக்கப்பட்டுத் தரையில் கிடந்த கிளை –
அலைக்கழியும் எனது உடலா?
இல்லை
துயருறும் எனது ஆன்மாவா?
இல்லை;

துயர்

அரிவாளுடன் நான் மரத்தைவிட்டு இறங்கும்போது
”இறங்காதே” என்றது,

இந்த மரத்தையும் என்னையும்
ஒன்றாய்ப் பிணைத்ததும்
என் கேள்விகளுக்குப் பதிலாகி
என் கேள்விகளை விழுங்கியதுமாகிய

ஏதோ ஒன்று

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP