Tuesday, August 20, 2013

ஓர் அந்திப்பொழுதில்

இளமைக்கும் செழுமைக்கும்
மெருகு ஏற்றிக் கொண்டிருந்தது
மஞ்சள் வெயில்.
புல்தரையின் ஒரு பூம்பாத்தியில்
வாடி உதிர்ந்துள்ள மலரிதழ்கள்
குருவி ஒன்று அவன் விழியைக்
கொத்தித் தின்னுவதைப்
பார்த்துக்கொண்டிருந்தது
விழியற்ற வானம்
குருட்டு உடல் வண்ணத்துப் பூச்சி தவித்து
ரோஜாவின் முள் குத்திக் கிழிந்தது
இரண்டு பிரம்பு நாற்காலிகளின் கீழ்
காலியான இரண்டு தேநீர்க் கோப்பைகள்
நிரம்பி வழிந்தன ஏதுமற்று

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP