Tuesday, September 10, 2013

மூட்டைப்பூச்சியாய்…

ஏவுகணையாய்
ஒரு விரல் எனது வானில்
வெட்ட விரிந்த வெளியில்
அதன் பார்வைக்குத் தப்ப வழியேயில்லை.
மூட்டைப்பூச்சியாய் பதறி ஓடுகிறேன்.
இருள் ஒதுங்கும் பள்ளங்கள்,
பதுங்கல் குழிகள் நிறைந்த
என் ராஜ்யத்தில் போய் ஒளிந்துகொள்ள

ஆனால், என்னை அது
எங்கும் தொடர்கிறது,
வெளிக்கு இழுத்து, அல்லது
அந்த ஸ்தலத்திலேயே நசுக்கித் தீர்த்துவிட,
வந்து நிற்கும் அதன் நிழலில்
உயிரைப் பற்றிக்கொண்டு நடுநடுங்குகிறேன்

பயத்தின்
உக்கிரத் தணல் எரியும் மண்டபம் ஒன்றில்
ரத்தக் களறியின்றி மரணமுமின்றி
அந்தர்யாமியாகத் தவிக்கிறேன்.
ஆனால் அது என்மேலே நின்று
என்னை நசுக்கிவிடக் –
கூடும் பொழுதுக்குள் நான் மறையவேண்டும்
இல்லையேல் அந்த வெள்ளைவெளியில்
விரல் நச்சிய இரத்தக் கரையாவேன் – ஆகி
உயிர் பெருக்கித் தொடர்ந்தலைவேன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP