Monday, September 2, 2013

திருமாங்கல்யம்

கடலில் உப்பாக
மையம்
எங்குமிருந்தது;
எங்கும் இல்லாதிருந்தது
அதன் வட்டம்

ஒரு தலையை மையம் கொண்ட
ஒரு திருமாங்கல்யம்
நான் வரித்த உலகம்

பிரபஞ்சவெளியின் முடிவின்மையெனும்
கொள்ளைச் செல்வத்தை
மொத்த சுதந்திரத்தை
ஒரு சிறு படிவமாக்கி
தன் கழுத்திலணிந்து கொள்ளும் ஆசை

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP