Friday, August 30, 2024

இழக்கப்படாத அழகு

இழந்துவிட்ட
தனது நீள்நெடுங்கருங்கூந்தலை
சமயங்களில் எண்ணி எண்ணி
ஒரு அபிநயத்துடன்
ஒரு நீள் நெடுங் கருஞ் சோகத்தை
அவர் எழுப்பும்போதெல்லாம்
அவர் எத்துணை அழகாகக்
காணப்படுவார் தெரியுமா?

Read more...

Wednesday, August 28, 2024

அழகு

அழகு என்பது
அறிந்த ஒன்றிலிருந்து
அறியாத பேரழகினைச் சுட்டும்
பேரழகா?

தன்னுடன் யாருமேயில்லாதபோது
தோன்றுவதன் பெயர்தான் அழகா!

நீண்ட விரிந்த கருங்கூந்தலுடன்
நின்று கொண்டிருந்தார் சுதா.

முகம் இல்லை
இப்போது பெயரும் இல்லை.
கைப்பேசியில் ஆழ்ந்த
அவர் குரலும் இல்லை

அங்கே ஓர் உருவம்கூட இல்லை

காலமும் இடமும் இல்லை

அவன் அவரைப் பார்த்த
அந்த ஒரு கணம்தான்!

எத்துணை பேரழகாய்
ஒளிர்ந்தது அது

Read more...

Monday, August 26, 2024

குழந்தைகளுக்கு முன்னால்தான்…

குழந்தைகளுக்கு முன்னால்
அவன் கிறிஸ்மஸ் தாத்தா
இந்த பாழுலக
மனிதர்களுக்கு முன்னால்
கடவுளின் ராஜ்ஜியத்தைச் சுட்டவந்த
ஒரு புதிய இயேசு கிறிஸ்து

இன்னொரு மதத்தை நிலைநாட்டிவிடாத
கிறிஸ்துவும் புத்தனுமான கவிஞன்
கவிதையைத் தவிர
பிறிதெதற்கும் கையேந்தாத
பிச்சுமணிக் கைவல்யன்
யாதுமானவன்!

Read more...

Saturday, August 24, 2024

பசியும் நிறைவும் அழகும்

யாருமே பார்க்கவில்லையா என்ன
அடங்காப் பசியுடன்
தன்னைப் புசித்துக் கொண்டிருக்கும் மான்களை
குன்றாத குளிர்ப் பார்வையுடன்
பார்த்துக் கொண்டிருக்கிற புல்வெளியை?

பசியடங்கிய நிறைவுடன்
புல்வெளியில் நிற்கும் மான்களும்
பசியடங்கிய
மரநிழலில் ஓய்வுகொண்டு
பார்த்துக் கொண்டிருக்கும் புலி குடும்பமும்தான்

எத்துணை அழகும் ஆற்றலும்
காதலும் கொண்டு ஒளிர்கின்றனர்

Read more...

Wednesday, August 7, 2024

உயரம்

Read more...

Monday, August 5, 2024

துண்டுபடாத முழுமையை நோக்கி…

இந்த முழு உலகையும் பேணும்
ஒரு பெரும் அரசியல் பணியினை
நாம் செய்தாக வேண்டியதிருக்கிறது

சுற்றுமதில்கள் மட்டும் இல்லையெனில்
உள்ளது மானுடச்சொர்க்கமே அல்லவா?

Read more...

Friday, August 2, 2024

கடற்கரை

வைத்த பாதங்களைப் பற்றி பற்றி இழுத்தபடி
இங்கே தங்கிவிடேன்! இங்கே தங்கிவிடேன்!
என்றது கடற்கரை மணல்
ஒவ்வோரு காலடியிலுமாய்க் கூடிய
மொத்த கடற்கரையும்!

அதெப்படி? அதெப்படி?
இடையறாத அழைகடலை நோக்கியல்லவா
அவன் நடந்து கொண்டிருந்தான்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP