எத்துணை பெரிய விடுதலை!
வியர்த்துக் கசியும் உடலை ஆற்றட்டும் என சட்டையைக் கழற்றி நாற்காலியின் முதுகில் போட்டான்! அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை ஆணானதால் போட்டான் மனிதன் ஒரு பாலுயிரியாயிருந்தால் இந்தப் பிரச்னை உண்டுமா, சொல்லுங்கள்!
Read more...Poet Devadevan
வியர்த்துக் கசியும் உடலை ஆற்றட்டும் என சட்டையைக் கழற்றி நாற்காலியின் முதுகில் போட்டான்! அவன் பெண்ணானதால் போடமுடியவில்லை ஆணானதால் போட்டான் மனிதன் ஒரு பாலுயிரியாயிருந்தால் இந்தப் பிரச்னை உண்டுமா, சொல்லுங்கள்!
Read more...பூமியின் தாகவிடாயினால்தானே
மழை பொழிகிறது பூமியின் மீது!
அறத்தின் தாகவிடாய் கொண்டுதானே
காலமற்ற பொழுதுகளில்
கருணையின் அவ்வப்போது
பெய்யும் பெருமழையும்
பொழிகிறது அறத்தின் மீது?
போதாத அதிருப்திக் கனலால்தானே
ஒரு மரத்தைக்கூடக் காணமுடியாத
பாலைவனமாகிக் கிடக்கிறது உலகம்?
காலம் காலமாய்
எரிந்து கொண்டிருக்கும் பாலைவனம்
எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பெருமழை
- நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் -
ஒட்டுமொத்தமான
தாகவிடாய் பெருகினால் மட்டுமே
பொழியும் காண்!
எல்லைக்குள் வசிப்பவர்களா
எல்லையோரம் வசிப்பவர்களா
எல்லைமீறலில் வசிப்பவர்களா
எல்லையில்லா வெளியில்
எல்லையையும்
எல்லையின்மையையும்
அறியும் வெளியில் வசிப்பவர்களா
யார் நீங்கள் என்று ஒருவர் கேட்டால்
நாம் யார் என்று சொல்லப் போகிறோம்?
அலம்புவதுபோல்
அவன் தலையைக்
கோதிச் செல்கிறார் செவிலி
கவலைப்படாதீர்கள்
எல்லாம் சரியாகிவிடும் என்றபடி,
எல்லாப் பிரச்னைகளும்
அங்கே-
நம் மண்டையில்தான் இருப்பதுபோல்!
தன் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால்
இருந்த இடத்தில் இருந்தபடியே
நடந்து கொண்டேயிருக்கிறது
இதயம்.
மூடிய பனித்திரை விலக்கி
தான் படைத்த உலகின்
குன்றாத பேரெழிலை
எட்டிப் பார்க்கிறான் சூரியன்!
நாம் படைத்த உலகைப் பற்றி
அவனுக்கென்ன கவலை?
ஓ, சூர்ய
நீ மலர்விக்கும் இப் பூமிப் பூவில்
நான் ஒரு இதழ், அப்படித்தானே?
என்ன வியப்பு இது, நீயே
எனக்கு உள்ளும் புறமுமாய்
திகழ்ந்து கொண்டிருப்பது?
நாம் யார் சூர்யா?
இப் பேரண்டத்திற்கும் வெளியேயிருக்கும்
பேரின்மைதான் கடவுள் எனில்
அவரும் நமக்கு உள்ளேயும் வெளியேயும்
இருப்பவர்தானே?
கடவுள் என்பதும்
பேரின்மை என்பதும்
தன்மய்யமற்றதாலே முடிவிலியும்
முடிவிலியானதாலே தன்மய்யமற்றதும்,
அல்லவா?
இம் முடிவிலியே
எல்லாப் படைப்புகளுக்கும் ஆதாரமாய்
தாய்பிள்ளை சுழற்சியில் இயங்குவதை
நான் என் கண்ணாலே பார்த்திருக்கிறேன், சூர்யா!
மனிதர்களும் தாம் படைக்கவேண்டிய
மானுட வாழ்வுக்கான முன்மாதிரியும்
இதுவாகவே இருக்க வேண்டும்.
இப் பேரண்டத்தின் மதம் இது
இல்லையா, சூர்யா?
உப்பிய வயிற்றை
ஒரு உள்ளங்கையால் தொட்டபடி
தன் உள்ளிருப்பை உணரும்
பெண் விழிகளைப் பார்த்திருக்கிறீர்களா?
இந்தக் குழந்தை-
(இதுபோல் இப்போது
உலகில் பிறந்து கொண்டிருக்கும்
ஒவ்வொரு குழந்தையும்தான்)
இந்த உலகைக் காப்பாற்றும்
கடவுள் என்றே நம்புகிறேன்
இந்த அன்னையர்கள் எல்லோருமே
கன்னிமேரிகள்தாம் என்றே நம்புகிறேன்
ஒரே ஒரு வேறுபாடுதான்
இயற்கை தன் தவறிலிருந்து
தன்னைத் திருத்திக் கொண்டுவிட்ட
இந்த உலகத்திலிருந்து இனி பிறக்கப்போவது
ஒற்றைப் பாலுயிரியான
தெய்வங்கள் மட்டுமே என்பதுதான்!
நிழற்குடைத் தாழ்வாரங்களிலோ
மழைநீர் ஓடும்
நிதான நடைத் தளங்களிலோ
எங்கேயும் அசையாது நிற்கின்றன
நடக்கின்றன
புருவக் குடையின்கீழ்
ஒரு ஜோடிக் கண்கள்
அமிர்த மழைப் பொழிவை
பார்த்தபடியோ
வேட்டபடியோ
பொழிந்தபடியோ
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP