பகலுக்கு பரிதிபோல
பகலுக்கு பரிதிபோல
இரவுக்கு வேண்டியிருக்கிறது
பிணச் சிதை நெருப்பு
நெய்யில் எரியும் சுடர்
மின்விளக்கு என
ஏதாவது ஒன்றா,
சுட்டும் விழிச்சுடர் போலும்
வான்மீன்கள் கோடி அல்லவா?
அதன் கீழ்தானே இருக்கிறது
மெய்வழிச் சாலை?
இந்த இருண்ட காட்டிடையே
பார்வையினின்றே பிறக்கும் பாதையாய்!