தப்பிக்க வழியுண்டோ?
உருவமில்லாத முழுமையும்
பெயர் கொடுக்கப்படும் போதுதானே
துண்டுகளாக மாறிவிடுகிறது?
துண்டுகள், ஆபத்தான துண்டுகள்
எனப் புரிந்து கொள்ளப்படும் போதுதானே
முழுமைக்கே திரும்பிவிடுகிறது?
இமைப் பொழுதில் மாறிவிடும் இவற்றை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தால்?