துண்டுகள்
மொத்த முழுமைக்கும் உருவமில்லை
துண்டுப் பகுதிகளுக்குத்தான் உருவமுண்டு
முழுமையில் எல்லாப் பகுதிகளும் இருக்கின்றன
ஆனால் துண்டுப் பகுதிகள் எதிலும்
முழுமை இல்லை. அதனால்தானே
அவற்றிற்குத் துண்டுகள் என்றே பெயர்?
முழுமையில் வாழாமல்
துண்டுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் வரை
உய்வில்லை இந்த உலகிற்கு,
மேலும் இந்த உலகத் துயர்களுக்கெல்லாம்
காரணம் இவன்தான் அல்லவா?