உருவம்
கடவுளுக்கு உருவமில்லை
ஆனால், செயல் எனும்
உருவத்தில்தான் அவரைக் காணமுடியும்!
ஆனாலும் நிச்சயமாக அது
நாம் படைத்த உருவத்திலில்லை.
நம்மால் படைக்கப்படாத
அந்த உருவத்திலும்கூட
அவர் மாறிக் கொண்டேயிருப்பதால்
அவரைப் பற்றுதல் என்பதே
புதுமாதிரியானதாக இருக்கிறது