கண்டுகொள்ள வேண்டியது
கண் கொள்ளாக் காட்சியாய்
தட்டுநீரில் நடந்து செல்லும்
கொக்கும் கொக்கின் பிம்பமும்!
தடாகத்தில் நீந்தும்
வாத்தும் அதன் பிம்பமும்!
நமது உருவிற்கும் பிம்பத்திற்கும்
இடையேயன்றோ இருக்கிறது
நாம் கண்டுகொள்ள வேண்டிய காட்சி?