பேரொலிமலர்
பதினொன்றாம் மாடியில்தான்
அவன் ஓய்வும் துயிலும்.
கீழே புல்வெளியும் மரங்களும் செழித்த
உபவனத்தில்தான் அவன் நடை.
திடீர் திடீரென
குழந்தைகளின் விளையாட்டுச் சதுக்கத்திலிருந்து
வானமும் பூமியும்
கூடிவிட்டாற்போல்
கோடானு கோடி சமிக்ஞைகளுடன்
விரிந்து பூத்து உதிரும் ஒரு
பேரொலிமலர்!