நாங்கள் உன்னை மறந்தது எப்படி?
முத்துப் பற்கள் ஒளிர
இடையறாது ஒலிக்கும் புன்னகையாய்
கடல் அலைகள்!
கரை மணல் மடிமீது அமர்த்தி
தழுவி வருடி சீராட்டிக் கொண்டு
நீலவானையும்
நிலாவையும்
நட்சத்திரங்களையும்
எல்லையற்ற அமைதியையும்
காட்டுகிறாய் உன் மக்களுக்கு!
அவர்களோ
வேறெங்கெங்கெல்லாமோ அல்லவா
சுற்றித் திரிந்து கொண்டு
போரிலும் துயரிலுமாய் உழல்கிறார்கள்?