நமக்குள்ளே
அடுத்த அடுத்த பொம்மைகளுக்கு
தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும்
குழந்தைகளைத்தாமே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
பேரின்மை
பொம்மை வடிவானவுடனேயே
மரித்தும் போனதை
கண்டு உதறி
யாண்டும் மெய்ம்மை காணவே
விழித்துக் கொண்ட குழந்தைகளைப் பார்த்திருக்கிறோமா?