செவிலி
அலம்புவதுபோல்
அவன் தலையைக்
கோதிச் செல்கிறார் செவிலி
கவலைப்படாதீர்கள்
எல்லாம் சரியாகிவிடும் என்றபடி,
எல்லாப் பிரச்னைகளும்
அங்கே-
நம் மண்டையில்தான் இருப்பதுபோல்!
Poet Devadevan
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP