Showing posts with label DD6. Show all posts
Showing posts with label DD6. Show all posts

Wednesday, April 24, 2024

30 -04 - 2024 கவிஞர் தேவதேவனுடன் ஓர் இணையவழி உரையாடல்

 


Read more...

Friday, January 26, 2024

கவிஞர் தேவதேவன் மற்றும் அவரது கவிதைகள் பற்றி - பாலாஜி ராஜு

இந்தக் காணொளியில் ரசிகர் பாலாஜி ராஜு, கவிஞர் தேவதேவனைச் சந்தித்த அனுபவம், அவரது கவிதைகளின் வழியாக விரிந்த கவிதை உலகிற்கு சென்றது மற்றும் அவருக்கு மிக நெருக்கமான கவிதைகளான ”அமைதி என்பது”, ”எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்க” மற்றும் ”தோள் பை” பற்றி உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துள்ளார்.


ரசிகர் பாலாஜி ராஜுவின் காணொளி

அமைதி என்பது” கவிதை இங்கே .....

”எத்துணைக் காதல் தெரியுமா இந்த சிறிய பசைப் பாட்டிலுக்கு” கவிதை இங்கே.....

"தோள் பை” கவிதை இங்கே.....

Read more...

Friday, December 22, 2023

கவிதைகளின் வாசிப்பனுபவம் #1

இந்தக் காணொளியில் ரசிகர் ஆதி, ”சூர்ய மறைவுப் பிரதேசம்”, ”ஒரு மரத்தைக் கூட காணவில்லை” கவிதைகள் தமக்கு எப்படி தெம்பூட்டுவதையும் வாழ்வின் இனிமைகள் எளிய விசயங்களில் இருந்தும் கிடைக்கலாம் என உணர்த்துவதையும் பகிர்கிறார்.


ரசிகர் ஆதியின் காணொளி

சூர்ய மறைவுப் பிரதேசம் கவிதை இங்கே .....

ஒரு மரத்தைக் கூட காணவில்லை கவிதை இங்கே.....

Read more...

Monday, November 27, 2023

ஒரு மரத்தைக் கூட காணமுடியவில்லை - காணொளியும், கவிதையும்

இந்தக் கவிதை ஓரு ரசிகரின் இனிய குரலில், அழகோவியமாக அமைந்துள்ளது.

கவிதை ஒலி, ஒளி வடிவில்

முழுக்கவிதையும் இங்கே.....

Read more...

Tuesday, November 7, 2023

தேவதேவனின் கவிதைகள் பற்றிய ஆவணப் படம் - யாதும் ஊரே, யாதும் கேளீர்.

சங்க காலத்தில், மக்களின் தொலை தூரத் தொடர்புகள் மிகுந்த நேரம் எடுப்பவையாக, தொலை தூரப் பயணங்கள் மிகுந்த ஆபத்துகள் நிறைந்தனவாக இருந்து இருக்கும். இப்போது போல தமிழ் நாட்டில் இருந்து டெல்லிக்கோ, அமெரிக்காவுக்கோ உடனடியாகப் பேசவோ, பயணிக்கவோ முடிந்து இருக்காது. இந்த சவால்களையெல்லாம் மீறி, ஒர் சங்க காலக் கவிஞன் நவீனமாகச் சிந்தித்து,
“யாதும் ஊரே, யாவரும் கேளீர்” எனக் கூறியுள்ளார்.

இந்த நவீனக் காலத்தில், இதனை அடுத்த தளத்துக்கு எடுத்துச் செல்வது சிறப்பு அல்லவா.

“யாதும் ஊரே, யாதும் கேளீர்” என்பது, மனிதர்களை மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்தின் மீதும் அன்புடன் இருப்பதல்லவா.

பெரும்பாலும், ஆளுமைகளைப் பற்றி ஆவணப் படங்கள் எடுப்பதுண்டு. இங்கு, வித்தியாசமாக, 2007 ஆம் ஆண்டு ஓரு ஆவணப் படம் கவிஞர் தேவதேவனின் கவிதைகளைப் பற்றி எடுக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள எல்லாவற்றின் மீதும் அன்பும், நம்பிக்கையும் வைத்துள்ள இந்தக் கவிஞரின் கவிதைகளைப் பற்றிய ஆவணப் படத்தின் தலைப்பு “யாதும் ஊரே, யாதும் கேளீர்” என அமைந்துது மிகச் சிறப்பு.

இது ஐந்து பாகங்களாக உள்ளது. ஓவ்வொரு பாகமும் குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல் , பாலை என்ற கருப்பொருட்களில் அழகுற காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. கவிஞர் க. மோகனரங்கன், அக்டோபர் 2021ல், தனது முகநூல் பக்கத்தில் எழுதிய குறிப்புடன், ஆவணப் படத்துக்கான இணைப்பு கீழே கொடுக்கப் பட்டுள்ளது.



 

















1 October 2021
க. மோகனரங்கன்
பதினைந்து வருடங்களிருக்கும். ஈரோடு புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு தேவதேவன், பிரான்சிஸ் கிருபா, கோபாலகிருஷ்ணன், மகுடேஸ்வரன் முதலியோர் தமிழினி அரங்கில் குழுமியிருந்தனர். ஒளிப்பதிவாளரான நண்பர் சிபி சரவணன் எழுத்தாளர்களை புகைப்படம் எடுத்து ஆவணப்படுத்தும் தன் திட்டத்தின் ஒரு பகுதியாக கவிஞர் தேவதேவனை படமெடுக்க அணுகினார். புகைப்படத்திற்கு பதிலாக ஒரு ஆவணப்படமே எடுத்துவிடலாம் என முடிவு செய்து குறைந்த கால அவகாசத்தில் கிடைத்த சொற்ப வசதிகளோடு எடுக்கப்பட்ட இப்படம் பலவகைகளிலும் முன்னுதாரணமான ஒன்று. உரையாடல்கள் எதுவுமில்லாமல் , மாறும் நிலக்காட்சிகளின் பின்ணனியில் தெரிவு செய்யப்பட்ட கவிதைகள் ஒலிக்க நகரும் படம் அலாதியானதொரு காட்சியனுபவம் தருவதாக அமைந்திருக்கும் இப்படத்தின் இயக்குநர் பிரான்சிஸ் கிருபா, ஒளிப்பதிவு சிபி சரவணன், பின்ணனியில் ஒலிக்கும் கவிதைகளுக்கு குரல் தந்தது மகுடேஸ்வரன். குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல் , பாலை என ஐந்து பகுதிகளாக இணையத்தில் பதிவேற்றப்பட்டிருக்கும் இப்படத்தினை பின்வரும் சுட்டிகளில் சென்று காணலாம்

பகுதி 1 - குறிஞ்சி

பகுதி 2 - முல்லை

பகுதி 3 - மருதம்

பகுதி 4 - நெய்தல்

பகுதி 5 - பாலை

Read more...

Saturday, April 2, 2016

தேவதேவன் கவிதைகள் முகப்படங்கள்


தேவதேவன் கவிதை முகப்படங்கள் (WALLPAPERS) இணைப்பு


தேவதேவன் கவிதை முகப்படங்கள் அறிமுக விவரம்

Read more...

Thursday, December 29, 2011

தருணம்

கன்யாகுமரியில் நடந்த யுவன் கவிதையரங்குக்கு கவிஞர் தேவதேவன் வந்தபோது எடுத்தபடம் . உடன் ஜெயமோகன்


Read more...

Saturday, June 25, 2011

திருப்பரப்பு

தொடர்வண்டி ஒன்றில்
ஒரு நீண்ட இரவு கடந்து
பாரமும் களைப்புமாய் 
இரயில் நிலையம் வந்து சேர்ந்தோம்

முழுசாய் எங்களுக்கே எங்களுக்கென
வந்ததொரு பேருந்து
அழைத்துச் சென்றது எங்களை
அவ்விடத்திலிருந்து

போர் விரித்தாடும் இடத்திலிருந்து
பாதுகாப்பான இடத்திற்கோ என
புகைந்தது புண்கள் நிறைந்த நெஞ்சு
தவறான இடத்திலிருந்து
சரியாக இடத்திற்கு
என்றது பேருந்து.
இதுவரை இருந்ததைவிட
இன்னும் மேலான இடத்திற்கு
அவ்வளவே என்றனர் தோழர்கள்.
ஆனால் ஆனால்
வழியெல்லாம் கிளைகளசைத்து
உயரமான மரங்களும் விண்ணும் 
உரக்க உரக்க கூவினவே
புறப்படும் இடத்தையே மன்னித்தும்
மறக்கவும் செய்திடும் 
சொர்கத்திற்கு என்று!

எங்களுக்காகவே கட்டப்பட்டிருந்தாற்போன்ற 
ஓரொற்றைவிடுதி வந்து சேர்ந்தோம்
எக்காலத்தும் அங்கு வந்துசேர்ந்தார் 
யாருமில்லை என்பதுபோல
புத்தம் புதிதாய் இருந்த விடுதி.
எங்களைக் கண்டதும் ஒளிர்ந்த 
அதன் காந்தப் புன்னகைதான் எத்தனை அழகு!
காலம் தோறும் அது தன் இன்மை காத்து வந்தது
தித்திக்கும் இவ்வினிமைக்காகத் தானோ ?

அவ்விடுதியை மையம்கொண்டே 
விண்ணும் மண்ணும்
எண்ணற்ற நட்சத்திரங்களும்
சூழ்திருப்பது கண்டு திடுக்கிட்டோம்.
இவ்வண்டத்தின் அத்தனை உயிர்களையும்
ஏற்று அரவணைக்க இயலும்
அத்தனை பெரும் பரப்புடையதாயிருந்தது
அந்த இடம் .

விடுதியின் மொட்டைமாடியிலிருந்தபடி
எங்கள் இன்பதுன்பங்கள் குறித்த
எங்கள் கவிதைகளை வாசித்துக்கொண்டிருந்த
எங்களை எழுப்பி நடத்தியது
இடையறாது பொழியும் மழைபோலொரு குரலோசை
எங்கோ ஊற்றெடுத்த ஓர் அன்புதான்
ஏகமாய் பரவி ஆங்காங்கே
தன் உருக்காட்டி எம்மை அழைத்ததுவோ ?

சூழ்ந்துள்ள ரப்பர் தோடங்களுக்கு நடுவே
இன்னும் அழிக்கப்படாதிருக்கும் காடுகளுக்கு நடுவே
பல்லாயிரம் கோடி வயதுடைய பாறைப்படுகைகள்மீது
ஓய்விலாது கலகலத்தபடி
ஓடி ஆடி தவழ்ந்து குதித்து புரண்டு சிலிர்த்துச்
சிரித்து களித்துக் கொண்டிருந்த நதி
ஓரிடத்தில் கொட்டியது அருவியாய்!
எம் நடை தடுத்தாட்கொண்ட
குன்றாப் பெருங்கொடை நிதியம்!
முடிவிலா இன்பத் தேடல்களால் வாழ்வைத்
துயர்களமாக்கிக் கொண்டிருக்கும் மனிதத் தலைகளுக்கும் 
தன் இன்பம் ஊட்டி மகிழ்ந்துகொண்டிருக்கும்
பெருங்கருணை 




திற்பரப்பில் நடந்த தேவதேவன் கவிதை அரங்கிற்கு வந்து திரும்பிய பின் கவிஞர் எழுதியது ,ஜீன் 11 உங்கள் நூலகம் இதழில் இருந்து .

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP