Showing posts with label DD2. Show all posts
Showing posts with label DD2. Show all posts

Wednesday, July 15, 2026

துளிகள்

பாத்திரத்தில்
வண்டலாயிருந்த அடித் தண்ணீரை
செடிகள் மீது கொட்டினான்

இலைகளில் தண்ணீர்
துளிகளாகவே படிந்ததேன்?

ஆறு, ஏரி, வாய்க்கால், குளம், குட்டை என
பெய்யும் மழையும் அமைதியான வேளை
இலைகளிலும் கம்பிகளிலும்
துளிகளாய் அமைந்தே நம் விழிகளை ஈர்ப்பதேன்?

Read more...

Monday, July 13, 2026

எத்தனை எத்தனை முயற்சிகள்!

பறவை
சொல்லித் தீராத ஒன்றையா
காற்றில் அலைக்கழிந்து
பூமியை வந்தடைந்து
சொல்லப் பார்க்கிறது
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று?

Read more...

Wednesday, July 8, 2026

இந்த வானம்!

தான் கடந்து போக முடியாத
ஒரு இடம் இந்த வானம்தான்
என்பதை நன்கு அறிந்து கொண்டது
இந்த பறவை!

போட்டி அல்ல
இனி தேவையானது
நட்புதான் என்பதையும்
பரிதியும் நிலாவும் விண்மீன்களும்
மேகங்களும் மலைகளும்
வான் உயர் மரங்களும்
புல்களும் கூட
இந்த வானத்தின் பிள்ளைகள்தாம்
என்பதையும்!

Read more...

Monday, July 6, 2026

எங்கே அவன்?

ஒரு காலத்தில்
கவிஞன் என அழைக்கப்பட்ட அந்த மனிதன்
அந்த வீட்டிலிருந்தும் வெளியேறிவிட்டான்!

அவன் தொட்ட இடமெல்லாம்
மய்யங்களும் எல்லைகளுமில்லாத
பெருங்களம்! சுதந்திர வெளி!
உண்மையும் அழகும் அன்பும்
வற்றாது பெருகிக் கொண்டிருக்கும் ஊற்று!
ஒழுங்கின்மைகளையெல்லாம்
விலக்கிக் கொண்டே முன் வந்து கொண்டிருக்கும்
ஒழுங்கின் பொன் வெளி!
கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியம்!

அங்கேயும் அவன் இல்லை
இருப்பது
ஒரு பேரரசு மட்டுமே!

Read more...

Friday, July 3, 2026

மாறாத குளிர்மையுடன்…

கடவுளின் சொந்த ராஜ்ஜியமான
வெயில் மலர்க் குளிர்தலத்து
பெங்களூருவாசி அவன்

தூத்துக்குடி நண்பகல் தகிக்கும் வெயிலில்
மாறாத குளிர்மை எப்படி?
ஒரு நண்பனுடனல்லவா
நடந்து சென்று கொண்டிருக்கிறான்?


நல்லதோர் வீணை(2025) தொகுப்பிலிருந்து

Read more...

Friday, June 26, 2026

மனிதன்

முட்டையிடுவதற்கும்
குஞ்சு பொரிப்பதற்கும்
துயில்வதற்குமான கூட்டை
வீடு என்பார்களா?
பாதையற்ற வெளிதானே
பறவைகளின் வீடு?

அது யாரு, பறவை என்பது?
விடுதலை என்பதுதானே
பறவை என்றானது?
ஒவ்வொரு விலங்குகளும் உயிர்களும்
அதனதன் குணங்கள்தாமே?

மனிதன் என்பவன் பற்றி
நாம் அறிந்து கொள்ள முடியாதா என்ன?
கடவுள்தான் மனிதன் ஆனது, சரி,
பாதைகளில் தொலைந்தமைதானே
இந்த பரிதாப நிலைகள்?

Read more...

Wednesday, June 24, 2026

உதிர்மலர்கள்

அழைப்பிற்கு இணங்கும்
அவனது அன்பு வருடலாலே
மடிந்து உதிர்ந்து உதிர்ந்து விழுகின்றன
உதிரம் குடிக்கவந்த கொசுக்கள் சில
உதிர்மலர்களைப் போல!

Read more...

Monday, June 22, 2026

இந்த பெயர்கள்

“நீங்கள் குழந்தைகளாகாதவரை
கடவுளின் ராஜ்ஜியத்தை அடைய முடியாது!”

உண்மை கண்டீர்!

எந்த ஒலி கேட்டாலும்
திரும்பிப் பார்த்த குழந்தை-
அதற்கு நாம் ஒரு பெயர் சூட்டிய முதல்தானா
அது தன் குழந்தைமையிலிருந்தும் விலகி
பிரச்னைகள் ஆரம்பித்துவிட்டன?

என்றால் இந்தப் பெயர்கள்
எதைச் சுட்டுகின்றன
எங்கு செல்கின்றன
என்பதையும்,
பெயரற்ற பெருநிலையையும்
குழந்தைமையையும்
கடவுளின் ராஜ்ஜியத்தையும்
நாம் கண்டு கொண்டிருக்க வேண்டுமல்லவா?

Read more...

Friday, June 19, 2026

நித்யவனத்தின்...

தன்னைத் தானே
சுற்றி வருகிறது
நித்திய வனத்தின்
வெள்ளிமலைப் பாதை
எங்கும் போகாமல்
எங்கும் போகாமலுமில்லாமல் !

Read more...

Wednesday, June 17, 2026

இந்த காற்று வெளியிடையே...

ஓடைநீர் ஒழுகிச் செல்லும்
ஓசைமட்டுமே கேட்கிறதென்றால்
இந்தப் பேரியற்கையும் பேரண்டமுமே
கேட்டுக்கொண்டிருக்கிறது
என்றுதானே பொருள்?

Read more...

Monday, June 15, 2026

கட்டுடல் அழகு

கட்டுடல் அழகு காணுமிடமெல்லாம்
ஆவியோடணைத்துக்
கட்டிப்பிடித்துக் கொள்ளத் தோன்றும்
தன்‌ அன்பையும் தோழமையையும்
ஒரு கணமும் தவற விடாமலும்
தேங்கிவிடாமலும்தானே
சென்றுகொண்டேயிருக்கிறது
காற்று?

Read more...

Friday, June 12, 2026

எத்துணை பெரிய சாதனை இது!

அந்த அமைதியை
டிப் டிப் என்று
ஒரு ஒலியினால் தானே
சொல்ல முடிகிறது
என்றது அணில்!

அதே அமைதியைத்தானே
'ப்ளம் கேக்' என‌
ஒரு பொருளின் பெயருமே
ஒலித்தது இப்போதும்!

இனி எல்லாப் பொருள்களுமே
இந்த உலகில்
இந்த அமைதியைத்தானே
ஒலிக்கப் போகின்றன!

Read more...

Wednesday, June 10, 2026

வானத்தைக் காட்டிவிட்டு

மேட்டு நிலமானாலும் சரி
மேலேறும் பாதையானாலும் சரி
வானத்தைக் காட்டிவிட்டு எப்போதும்
பூமிக்கே இறங்கிவிடுகிறது 'அது'!‌

Read more...

Monday, June 8, 2026

ஒளியில் கண்சிமிட்டிக்கொண்டு ...

ஒளியில் கண் சிமிட்டிக்கொண்டு
ஓடும் இந்த நதி
எங்கு தோன்றினோம்
எங்கு போய்க்கொண்டிருக்கிறோம்
என்பதே தெரியாது
யோசிக்கிறதுமில்லை

தன் வாழ்வுப் பயணத்தில்
பாறைகள் பசுந்தாவரங்கள் என
வந்தவர்களோடெல்லாம்
கொண்ட உறவினையும்
இதன்‌ இனிமையையும் தவிர
வேறெதுவுமே அறியாது
அப்படி ஒரு வெகுளி!

Read more...

Friday, June 5, 2026

மாமலைகள்‌ பற்றி

உலுக்கி குலுக்கி
சிதறி உருளச் செய்துவிட்டிருக்கிற
ஆற்றல்
இந்த ஒவ்வொரு பாறைகளிடமும்
குண்டுக் கற்களிடமும் பருமணல்களிடமும்
தூசுகளிடமும்கூட

Read more...

Wednesday, June 3, 2026

மழையின் செய்தியாய் ...

மழையின் செய்தியாய்
வானத் துண்டுகள் போல்
மழைத் திட்டுகள்!

Read more...

Monday, June 1, 2026

விண்ணினின்று இறங்கி...

விண்ணினின்று இறங்கிய பேரன்பாய்..
மலைகளையும் பள்ளத்தாக்குகளையும்
வளைத்துத் தழுவிக் கொண்டிருந்தது மஞ்சு

மனித நெருக்கடிகளே இல்லாத வெளியில்
ஒரு மனிதன் ஒரு மனிதன்மீதுதான்
எத்துணை பரிவு கொண்டவனாகிவிடுகிறான்‌!

எதிரே வந்துகொண்டிருக்கும் இருவர்
எத்துணை வறுமையும் கொந்தளிப்புமாய்
இருந்தாலுமென்ன,
இந்த நேரம் இந்த வெளியில்
பேரன்னையின் அரவணைப்பில் துவளும்
பிள்ளைகளைப் போலல்லவா
காணப்படுகிறார்கள்?

Read more...

Friday, May 29, 2026

அந்த மரம்தானா இது?‌

நில்! என்று சொல்லி அவனை
நிற்கவைத்துவிட்டது யார்?

ஒரு மரம்
கொழித்துக் குலுங்கும்
ஆயிரம் ஆயிரம் மலர்களோடு ?

ஒரு மரத்தைக்கூட காணமுடியாத
அன்பில்லாத
இந்த உலகைவிட்டு
திரும்பு திரும்பு
இங்கே திரும்பி நட!‌ என‌
தன்னை நோக்கி அழைக்கவந்த
அந்த மரம்தானா அது?

Read more...

Friday, May 15, 2026

அற்புதம் !

தேநீரில்
சற்று சூட்டை இறக்கி
குளிர்மை சேர்ப்பதற்காக
குவளையை மெலிதாய்
சுழற்றினான்.

கைவிரல்கள், குவளை,
குவளைத் தேநீர்,
தேநீரை பருகிக்கொண்டிருந்த ஒளி _

யாவுமல்லவா இணைந்து நடனமாடியது!
உலகமே விழிகள் திருப்பி வியந்து நிற்க
நிகழ்ந்து கொண்டிருந்ததுதான்
எத்துணை பெரிய அற்புதம்!

Read more...

Wednesday, May 13, 2026

அவனது தேநீர் நேரம்

தண்ணீர் குடிக்க என
எழுந்தாலே போதும்
தம்ளரில் விழுகையில்
தன் வெண்இன்மைகளை அல்லவா
நுரைத்து பூத்து சிரித்துக்கொண்டாடியபடி அல்லவா
ஆட்டம்போடுகிறது தண்ணீர் !‌

இப்போது
சர்க்கரை இல்லாத
பால் இல்லாத
அரை‌ தம்ளர்
கரிய தேநீரைச் சூடாற்றுகையில்
அதேபோலவே ஒரு வெண்இன்மை -
நுரைத்து பூத்து சிரித்துகொண்டாடுகிறது;

புதிதாக
சூடு பரக்கும் ஆவி
திசைநோக்கி வீசாதபடிக்கு
அமைந்த காற்றாதலால்
சுழன்று சுழன்று
பேரின்ப நடனமல்லவா ஆடுகிறது!‌

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP