குளிர்
குளிர் கூடிவிட்டது
எனது பெருங்களிப்பும்தான்
கூடிவிட்டது!
இறுகக் கட்டி அணைப்பதுபோன்ற
இந்தக் குளிர்
உனது பேரன்புதான் அல்லவா?
உனது செல்ல ஆட்டுக்குட்டிகளான
எங்களுக்கு
தலைக்கவசமும் உடல்கவசமுமாய்
குளிராடைங்கள் அணிவித்து
நடக்கமட்டுமே செய்தால் போதுமென்றும்
வேறு ஒன்றும் செய்யவேண்டியதில்லை என்றும்
இரண்டு கைவிரல்களையும் சட்டையின்
கீழ்ப்பைகளுக்குள் புதைத்துக்கொண்டு
எத்துணை சுகமாய் நடக்கச்சொல்கிறாய்
உன் காதல் வெளியில்!