அந்த பெருமழை!
பூமியின் தாகவிடாயினால்தானே
மழை பொழிகிறது பூமியின் மீது!
அறத்தின் தாகவிடாய் கொண்டுதானே
காலமற்ற பொழுதுகளில்
கருணையின் அவ்வப்போது
பெய்யும் பெருமழையும்
பொழிகிறது அறத்தின் மீது?
போதாத அதிருப்திக் கனலால்தானே
ஒரு மரத்தைக்கூடக் காணமுடியாத
பாலைவனமாகிக் கிடக்கிறது உலகம்?
காலம் காலமாய்
எரிந்து கொண்டிருக்கும் பாலைவனம்
எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் பெருமழை
- நன்றாகக் கேட்டுக் கொள்ளுங்கள் -
ஒட்டுமொத்தமான
தாகவிடாய் பெருகினால் மட்டுமே
பொழியும் காண்!