Monday, August 26, 2024

குழந்தைகளுக்கு முன்னால்தான்…

குழந்தைகளுக்கு முன்னால்
அவன் கிறிஸ்மஸ் தாத்தா
இந்த பாழுலக
மனிதர்களுக்கு முன்னால்
கடவுளின் ராஜ்ஜியத்தைச் சுட்டவந்த
ஒரு புதிய இயேசு கிறிஸ்து

இன்னொரு மதத்தை நிலைநாட்டிவிடாத
கிறிஸ்துவும் புத்தனுமான கவிஞன்
கவிதையைத் தவிர
பிறிதெதற்கும் கையேந்தாத
பிச்சுமணிக் கைவல்யன்
யாதுமானவன்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP