அழகு
அழகு என்பது
அறிந்த ஒன்றிலிருந்து
அறியாத பேரழகினைச் சுட்டும்
பேரழகா?
தன்னுடன் யாருமேயில்லாதபோது
தோன்றுவதன் பெயர்தான் அழகா!
நீண்ட விரிந்த கருங்கூந்தலுடன்
நின்று கொண்டிருந்தார் சுதா.
முகம் இல்லை
இப்போது பெயரும் இல்லை.
கைப்பேசியில் ஆழ்ந்த
அவர் குரலும் இல்லை
அங்கே ஓர் உருவம்கூட இல்லை
காலமும் இடமும் இல்லை
அவன் அவரைப் பார்த்த
அந்த ஒரு கணம்தான்!
எத்துணை பேரழகாய்
ஒளிர்ந்தது அது