Friday, August 2, 2024

கடற்கரை

வைத்த பாதங்களைப் பற்றி பற்றி இழுத்தபடி
இங்கே தங்கிவிடேன்! இங்கே தங்கிவிடேன்!
என்றது கடற்கரை மணல்
ஒவ்வோரு காலடியிலுமாய்க் கூடிய
மொத்த கடற்கரையும்!

அதெப்படி? அதெப்படி?
இடையறாத அழைகடலை நோக்கியல்லவா
அவன் நடந்து கொண்டிருந்தான்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP