Wednesday, May 1, 2024

இருந்த இடத்தில்

இருந்த இடத்தில்
இருந்தபடியே
இயங்கிக் கொண்டிருக்கும்
இந்தக் கட்டடங்கள் மரங்கள் சாலைகள்
இன்னும் என்னென்ன பொருட்கள் எல்லாம் . . .

எத்துணை அழகாக அமைதியாக
உறுதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன
மனிதனை அலைக்கழிக்கும்
மனம் என்பதே
அவர்களிடம் இல்லாததால்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP