Wednesday, July 3, 2024

சந்திரமுகி

தன்னுடைய காதலைத்தான்
தான் தேடி அலைகிறோம் என்பதை
தேவதாசும் அறிந்திலனோ?

உலகியல் இன்பத்திலில்லை ”அது” என்பதை
தேவதாசிடமிருந்துதான்
கண்டுகொண்டாளோ சந்திரமுகி?

குடித்துக் குடித்துத்
தன்னை அழிக்கப்பார்த்துக்கொண்டிருக்கிற
தேவதாசைக் காக்கும் தாசியாகிறாள்!

தான் கண்டதை
விண்டுரைக்க முடியவேயில்லையா
சந்திரமுகிக்கும் தேவதாசிடம்?

தொண்டுசெய்தலும் உறவாயிருத்தலும் தவிர
கண்டடைய ஒன்றுமில்லை என்பதைக்
கண்டுகொண்டாளோ சந்திரமுகி?

Read more...

Monday, July 1, 2024

பார்வதியும் தேவதாசும்

”நான்” ”எனது” என்று அலைவது
எப்படி காதலாகும்?

தேவதாசிடமிருந்தது காதலா?
பார்வதியிடமிருந்ததல்லவா காதல்?

சாகுந்தறுவாயில்
பார்வதியை நோக்கித்தானே
பாடுவிடாது வந்துகொண்டிருந்தான்
தேவதாஸ்?
தேவதாசின் பிணத்தைக் காண
ஆசைப்பட்டுத்தானே விரைந்தாள் பார்வதி?

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP