பேரு புகழு . . .
பேரு புகழு இரசிகர்கள் என
நிறைந்திருந்த மனித சமூகம்
நடுவே அமர்ந்து
பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள்
“நீ பெண்ணாயிருப்பதே போதும் தெரியுமா?”
என்றான் அவன்.
அறிவுரை கூற வந்துவிட்டாயா, முட்டாள்!
நாம் மனிதர்களாய் இருப்பதே போதுமானது என
ஏன் சொல்ல முடியவில்லை உனக்கு?
எனச் சொல்லாமலேயே
ஒரு முறை முறைத்தார் அவர் அவனை!