Friday, September 27, 2024

ஒளியென்றானவன் - ஜி.எஸ்.எஸ்.வி. நவின்

சாய் ரமணா ஜெய்ரிகி பதிப்பகத்தினரால் வெளியிடப்பட இருக்கும் கவிஞர் தேவதேவனின் ”ஈரத்தளமெங்கும் வானம்” கவிதைத் தொகுப்பிற்கு ஜி.எஸ்.எஸ்.வி. நவின் முன்னுரை எழுதியுள்ளார். அந்த முன்னுரைக் கட்டுரை ”கவிதைகள்” இணைய தளத்தில் வெளிவந்துள்ளது.

”தேவதேவன் பற்றிய ஒரு புகார் தமிழ் எழுத்தாளர்களிடம் உண்டு. குறிப்பாக அவர் தலைமுறை, தொட்டு அடுத்த தலைமுறை கவிகளிடத்தில். தேவதேவன் எங்கேயும், எப்போதும் அவரது கவிதைகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார் என்பது. ஆனால் உண்மையில் தேவதேவன் அவரது கவிதையில் சொல்லப்படாத விஷயங்கள் வேறு உலகில் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர். அதனை எழுதியும் காட்டியவர். எழுபத்தைந்து வயது கடந்த தேவதேவன் இந்த ஆண்டு (செப்டம்பர், 2024) எழுதிய கவிதை தொகுப்புகள் மட்டும் பன்னிரெண்டு. இன்னும் ஐந்து தொகுப்புகள் கூட ஆண்டிறுதிக்குள் எழுதக்கூடும். மேலும் படிக்க இங்கே சொடுக்கவும்...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP