Friday, October 4, 2024

கணக்கும் கவிதையும் சேர்த்து

கணக்கும் கவிதையும் சேர்த்து
ஒரு பாடல் புனைந்திருந்தான் அவன்

கணக்கும் கவிதையும் அறிந்தவர்களெல்லாம்
கூடிவந்து பாடிப் பரவசமானார்கள்.

கணக்கு மேலோங்கி நிற்கும்போதெல்லாம்தான்
குழப்பங்களும் பிழைகளும் துயர்களும் போர்களும்
தோன்றித் தோன்றி வதைத்தன காண், உலகை!

Read more...

Wednesday, October 2, 2024

என் கண்ணில் உதிரம் கொட்டியதென்ன?

எப்போதும்
குழந்தைமை மாறாச்
சொல்லுடையாள் – மருமகள் –
புதுவீட்டை அமைக்கும்
பணியிலிருந்த வேலையாட்களைவிட்டு
அவள் வெளியே செல்ல நேர்கையில்
என் கண்களில் உதிரம் கொட்டும்படியாய்
சொன்னாளே மறைந்துநின்றபடி
தன் கைச்சைகை கொண்டு
“அப்பா, keep an eye on them!”

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP