Friday, October 4, 2024

கணக்கும் கவிதையும் சேர்த்து

கணக்கும் கவிதையும் சேர்த்து
ஒரு பாடல் புனைந்திருந்தான் அவன்

கணக்கும் கவிதையும் அறிந்தவர்களெல்லாம்
கூடிவந்து பாடிப் பரவசமானார்கள்.

கணக்கு மேலோங்கி நிற்கும்போதெல்லாம்தான்
குழப்பங்களும் பிழைகளும் துயர்களும் போர்களும்
தோன்றித் தோன்றி வதைத்தன காண், உலகை!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP