பூர்வீகம் சொர்க்கம்
பூர்வீகம்
சொர்க்கம்.
என்றாலும்
பிறந்து வளர்ந்ததெல்லாம்
இங்கேதான்.
அவ்வப்போது அவ்விடம்
போய் வருவதுண்டு என்றாலும்
நமக்கு வாழக் கொடுத்துவைத்திருப்பது
இந்த நரகம்தானே அய்யா.
இந்த நரகக் குழிக்குள்ளும்
பூர்வீக வாசனைதான்
நம்மைக் காப்பாற்றிவருகிறது
என்றறிந்தோனால்
சும்மாவிருக்க இயலுமோ அய்யா.