ஆடைகள் அணிகலன்கள்
இந்த ஆடையும்தான்
எத்துணை அழகு, பார்த்தீர்களா? என்று
இரண்டு கைகளாலும்
தன் ஆடையை
அகலப் பிடித்து
அபிநயத்து நின்றாள் சுநேகா.
‘இந்தப் பெண்ணும்தான்
எத்துணை அழகு!” என்று
விழிகசிந்து கொண்டு நின்றது
சுற்றி நின்ற மொத்த உலகமும்!