சிட்டுக்குருவிகள்
நீரில் குளித்துவிட்டு
நீர் ஒட்டா தாமரை இலை உடம்பைச்
சிலுப்பி நீர் உதிர்த்துவிட்டுப்
பறந்து செல்கிறது பறவை,
உள்ளுக்குள் மட்டும்
தணியாத தாகக் குவளைக்குள்
தண்ணீரையும் விசும்பையும்
நிறைத்துக் கொண்டு!
சூழல் எதனாலும் பாதிக்கப்படாத உன்னையும்
தங்கள் சூழலால் அழித்துவிடக் கூடுமோ
இந்த மனிதர்கள்?
”உடலைத்தானே அழிக்கமுடியும்” என்றே
அது அப்போதும் பறந்து கொண்டிருந்தது.
- துயர்மலி உலகின் பெருவலி (காவியம்) - 2023 தொகுப்பிலிருந்து