Wednesday, May 15, 2024

கவிதையின் இயல்பு

கவிதை என்பது
(வாழ்வு என்பதும்)
ஒரு பெரும் களியா?
பெரும் துயரா?
பேரின்மையா?

எதுவானாலும்
பெருங்களியை மய்யமிட்டுத்தானே
சுற்றி சுற்றி கும்மியடிக்கின்றனர்?

இன்மையிலிருந்து வரும் இசையும்
இருப்பிலிருந்து வரும் இசையும்
பெருங்துயரிலிருந்து வரும் இசையும்
தொட்டுத் தொட்டு
இன்பத்தையும் கொண்டாட்டத்தையும்தானே
எழுப்புகின்றனர்?

கவிதையின் இயல்பு
பெருங்களிதான் என்பதை
நாம் கற்றுக் கொண்டுதானே இருக்கிறோம்?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP