Monday, June 17, 2024

முதன்மையானது

அழுக்குக் கந்தல் குழந்தை ஒன்று
நடைபாதையில் விழுந்து கிடந்த
குச்சிமிட்டாய் ஒன்றை எடுத்து
மண்ணைத் துடைத்துவிட்டு
சப்பத் தொடங்கியாயிற்று
ஆகா, என்ன சுவை! என்று
சுவையில் கிறங்கின அதன் விழிகள்!

அவன் தன் சிந்தனையில் ஆழ்ந்து போனான்

ரொம்ப சல்லிசான ஆரஞ்சுமிட்டாய்தான்
ஏழைகளுக்கானதாயிருந்தது

செல்வந்தர்களுக்கேயானதாய் ஏழைகளுக்கு
எட்டாததாயிருந்தது சாக்லேட்.

பின்னர் சாக்லேட்டும்
எட்டும்படியானபோது
மேலும் எட்டாததாயின
இன்னும் இன்னும் என பல இனிப்புகள்

ஆனால் எக்காலத்திலும் எவ்விடத்திலும்
குழந்தைகள் நாவில்
அம்ருதமாகத் தித்தித்தது எந்த இனிப்பும்!

வறுமை நம்மைத் தீண்டாமலிருக்க
இரண்டு காரியங்கள்
நாம் செய்தாக வேண்டியுள்ளது
அவற்றுள் முதன்மையானதைத்தானே
நாம் முதன்மையானது என்று சொல்லமுடியும்
பிறிதொன்றை நாம் கண்டுகொள்ளத்தான்
வேண்டுமென்றாலும்..?

முதன்மையாக நாம் குழந்தைகளாவதுவரை
கடவுளின் ராஜ்யத்தை அடைய முடியாது என்று
சொல்லி இருக்கவில்லையா, இயேசு
ஒரு சொற்றொடரில்
உலகின் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான
ஒரே தீர்வாக!

Read more...

Friday, June 14, 2024

குருவியுடன் சற்று நேரம்

முகப்படம் உருவாக்கம் - ஸ்ரீனிவாச கோபாலன்

Read more...

Wednesday, June 12, 2024

கடவுள்

பையுடன் வருகிறார் விருந்தாளி
கொஞ்ச நாள் தங்கப் போகிறார்
என்பதில்தான் நாய்க்குட்டி சிம்பாவுக்கு எத்துணை களி!
விருந்தாளி என்பவர் கடவுள் அல்லவா?

பையுடன் வீட்டைவிட்டு
விடைபெறுகிறார் விருந்தாளி
ஒரு வெறுமையை உண்டாக்கி விட்டுப்
போகிறார் அதுதான் கடவுள் என்பது போல்!
எப்படி கண்டு கொள்கிறது சிம்பா அதையும்தான்!

Read more...

Monday, June 10, 2024

அணில்பிள்ளை

தளராச் சுறுசுறுப்புடன்
உரக்கக் கத்தும் போதும் சரி,
உரக்க உரக்க ஓடும்போதும்
தாவும்போதும் ஏறும்போதும்
இறங்கும்போதும் குதிக்கும்போதும் சரி
உன்னை மறக்காமல்
சுட்டு விரல் போன்றோ
வால் தூக்கிக் கொள்கிறது
இந்த அணில்?

நீ எங்கே இருக்கிறாய்?

அண்ணாந்து பார்க்கும்படியாய்
வானத்தில்?
எல்லா இடங்களிலும் தேடும்படி
ஒவ்வொரு பொருளிலும்?

உயிரே,
உன்னைப் புரிந்து கொண்ட
ஒரு ஜீவன்
இந்த அணில்பிள்ளைகள்போல்
யாருண்டு?

Read more...

Friday, June 7, 2024

சூர்யமறைவுப் பிரதேசம்

முகப்படம் உருவாக்கம் - ஸ்ரீனிவாச கோபாலன்























Read more...

Wednesday, June 5, 2024

கண்கள் மட்டுமே தொடும் மலர்கள்

மேல்வானத்
திரை நடுவேயும்
மரங்களிடையேயும் வந்து
பூத்தது காண்
ஒரு மாலை வெயில்ப் பெருமலர்

காதல் கொண்டு அதனைக்
கொய்ய நெருங்கிக் கொண்டிருந்தது
அந்தி என்னும் ஒரு செம்பொன் மலர்

அதைத் தொடர்ந்து
விண்மீன் புள்ளிகளுடன்
ஒரு காரிருள் மலர்

அதைத் தொடர்ந்து
கொய்த மலர்கள் கோடியுடன் வந்து
கவிழும் ஒரு பூக்குடலையாய்
ஒரு காலை மலர்

அதைத் தொடர்ந்து
பசுமரக் கிளை இலைகளெல்லாம்
விண்மீன்களாக்கி விளையாடும்
நண்பகல் என்னும் ஒரு பேரொளி மலர்

Read more...

Monday, June 3, 2024

ஒரு மரமும் கூட…

ஒரு மரமும் கூட தன்னைக்
கடவுள் என்றுதானோ சொல்கிறது?
இல்லை, இல்லை.

ஓராயிரம் பூக்களுடன் வசந்தராணியாய்
ஒற்றை மலர் போல ஒரு கோலம்!

ஓராயிரம் பூக்களையும் உதிர்த்துவிட்டு
அத்தனை நாட்டியர்களையும் சவாலுக்கழைக்கும்
ஒளிநர்த்தன அபிநயக் கிளைகளுடன் ஒரு கோலம்!

ஓராயிரம் இலைகள் தனித்தும் கூடியும்
காற்று வெளியில் பொங்கிச் சிறகடித்துக் கொண்டிருக்கும்
போது ஒரு கோலம்!

தனது வாழ்வையே போதனையாயும்
போதனையையே வாழ்வாயும்
தன்னையே அதுவாகவும்
அதனையே தானாகவும்
பெயர் கொண்டும் உருகொண்டும்
சொல்லாகவும் விக்கிரமாகவும் நிற்கும் ஒரு கோலம்!

ஆனால் எந்த கடவுளாலும் விக்கிரகங்களாலும்
ஆவதில்லை
ஒருவன் தன்னைத்தானே உணராத வரை
என்று ஒரு கோலம்!

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP