Monday, June 10, 2024

அணில்பிள்ளை

தளராச் சுறுசுறுப்புடன்
உரக்கக் கத்தும் போதும் சரி,
உரக்க உரக்க ஓடும்போதும்
தாவும்போதும் ஏறும்போதும்
இறங்கும்போதும் குதிக்கும்போதும் சரி
உன்னை மறக்காமல்
சுட்டு விரல் போன்றோ
வால் தூக்கிக் கொள்கிறது
இந்த அணில்?

நீ எங்கே இருக்கிறாய்?

அண்ணாந்து பார்க்கும்படியாய்
வானத்தில்?
எல்லா இடங்களிலும் தேடும்படி
ஒவ்வொரு பொருளிலும்?

உயிரே,
உன்னைப் புரிந்து கொண்ட
ஒரு ஜீவன்
இந்த அணில்பிள்ளைகள்போல்
யாருண்டு?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP