Friday, June 28, 2024

புகழ்

நாலுபேர் அறியப்பெறுவதில்
சந்தோஷம் கொள்வதற்குப் பெயர்தான்
புகழ் என்பதா?
இவ்வுலகத் துயர்களினதும்
தீமைகளினதும் ஊற்றே
இங்கிருந்தல்லவா தொடங்குகிறது

சிக்கல்களையே நெய்துகொண்டிருக்கும்
மனிதர்களைப் பார்த்து கேட்கிறான்
தன் தனிமையையும் துயர்களையும்
கடக்க தெரிந்தவன்
நிறைமகிழ்வின் ஊற்றை அடைந்தவன்
ஊற்றும் ஊற்றுமுகமுமானவன்
யாம்பெற்ற புனிதமுழுமையின் பேரின்பத்தைப்
பாருக்கெல்லாம் வழங்கிவிடப் பார்ப்பவன்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP