நான்நீ
நான் வேறு நீ வேறின்றி
இருக்கும்போதுதான்
எத்துணை அமைதி!
அமைதி மட்டுமே!
“நானா”க இருக்கும்போது மட்டுமே
உன்மீது பரிவுகொண்ட உறவாக, செயலாக
எந்தத் துயர்களுக்கிடையிலும் ஒளிரும்
பெரும்களிகள்! பெருநிறைகள்!
“நீ”யாக்கி உன்னைப் பிரிந்திருக்கையில்தானே
இவ்வுலகத் துயர்களையெல்லாம் தாங்கி
தவிப்பவனாக இருக்கிறேன், என் அன்பனே?