!?
வியப்புக் குறி என்றும்
அழைக்கப்படும் உணர்ச்சிக்குறியைத்தான்
கொஞ்சம் நீட்டி, சுளித்து, வளைத்து
கேள்விக் குறியாக்கியிருக்கிறோம்.
அதாவது அன்பர்களே
நாம்தான் கேள்விக் குறியாக்கியிருக்கிறோம்
அந்த ஆதிக் குறியை!
ஆகவே அன்பர்களே
அந்தக் கேள்வியை
நாமே தட்டி நிமிர்த்தி
உண்மையைப்
பார்த்துவிட முடிகிறது அல்லவா?