காந்தியின் பொம்மை
காதுகளைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு
கண்களைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு
வாயைப் பொத்திக்கொண்டு ஒரு குரங்கு
சும்மா சும்மா ஓடிப்போய் நின்றா
நாம் எதையாவது
பார்க்கவும் கேட்கவும் பேசவும் செய்கிறோம்?
காண்பதற்குத்தானே அய்யா
இந்தப் பொம்மைகளையும் வைத்திருக்கிறீர்கள்?
இவைகள் நல்லவைகளா? கெட்டவைகளா?
முன்னறிவில்லாத காணுகையிலிருந்துதானே
மனிதனால் படைக்கப்பட்டிராத
ஒளியின் பாதை
ஓடி வந்து நடத்துகிறது நம்மை?