காய்ச்சல்-2
மென்மையான சூட்டில்
யாரோ அவனை
வேக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
மானுடப் பசியாற்றும்
அப்பமாகிக் கொண்டிருந்தால், சரிதானே?
சாலச் சமைந்த அப்பம் போலும்
சுட்ட கிழங்கு போலும்
நனி கனிந்த பழம் போலும்
அவர், எத்துணை அழகாய்_
துக்கத்தையும்
துக்க நீக்கத்தையும் கண்டுகொண்ட
தேவதை போலத்தானே காணப்படுகிறார்;
அமைதி கொள்வதற்கன்றி
கவலை கொள்வதற்கோ
களி கொல்வதற்கோ
என்ன இருக்கிறது?