கிச்சு கிச்சு மூட்டினால்…
கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை
இந்த பூ மரத்திடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்.
காற்றின் தீண்டலில், பூத்துப் பூத்துக்
காணுமிடத்தையெல்லாம்
முத்தமிட்டுக் களிக்கும் இந்த மரம்
இந்த வான்மீன்களிடமிருந்துதான்
கற்றுக் கொண்டிருக்க வேண்டும்
பேரொளிரும் ஆனந்தப்
பெருவெளியிடமிருந்துதானே
கற்றிருக்க வேண்டும்
இந்த வான்மீன்களும்?
கிச்சு கிச்சு மூட்டினால்
மலர்களாக உதிர்க்கிறது குழந்தை!