கவிதைத் தொழில்
கவிதையின் மதம் உலாவும்  
கடவுளின் ராஜ்ஜியத்தை  
நிறுவ வேண்டுமல்லவா?  
 
”எனது அழகினதும் ஆரோக்கியத்தினதும் இரகசியம்  
கவிதைதான்” என்றபடி போஸ் கொடுக்க  
ஒரு கவிஞனைக் கொண்டு வந்து நிறுத்தினோம்.  
 
“கடை விரித்தோம், கொள்வாரில்லை”  
என்று சொல்ல  
நாம் ஒன்றும் பழைய வள்ளலாரில்லையே  
 
பார்த்துவிடலாம் ஒரு கை!