Thursday, October 10, 2013

புழு

நட்டநடுச் சாலையில் ஒரு புழு

என்னை வியக்கவைத்தது;
பயம் பதற்றமற்ற நிதானமான அதன் நடை
வேட்டையாடாது, வியர்க்காது
இலைகள் தின்று உயிர் வளர்க்கும்
அதன் வாழ்க்கை.
இயற்கை மத்தியில்
தன்னுள் ஆழ்ந்து
தானே ஆகிய கூட்டில்
சிறகு முளைக்கும் வரை புரியும் தியானம்

சிறு குச்சியொன்றைக் கையிலெடுத்து
அதைச் சீண்டுவேன் விளையாட்டாக;
பயம், பதற்றத்தை நான் அதற்கு ஊட்டுவேன்
சிறுவயதில்
அது துன்புறுவதை அறியாத ஆய்வு ஆர்வம்
சிறுவயதினுள் பெருவயதின் குரூரம்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP