Monday, April 7, 2025

நாம் செய்ய வேண்டியதென்ன?

இந்த பூமியை
நாம் ஒரு கோயில் என உணர்வதற்கு
ஒவ்வொரு உயிர்களையும் தாவரங்களையும்
விக்கிரகங்களாக உணர்வதற்கு
தானாக நிகழும் ஒவ்வொரு செயல்களும்தான்
கடவுள் என உணர்வதற்கு

நாம் செய்ய வேண்டியதென்ன?

யாராவது சொல்லிக்கொடுத்து நிகழ்வது செயலாகுமா?
தானாக நிகழ்வதல்லவா செயல் என்பது?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP