ஓடும் நதி
ஓடும் நதி
தன் உள்ளத்து மீன்கள் மூலமே
அறிந்து கொள்கிறது,
அனைத்து திசைகளையும்!
திசைகளற்ற பெருவெளியையும்!
தான் வாழும் இடத்தையும்!
தன்னையும்!
தான் அல்லாததை
அறிய முற்படும்போதுதானே
தன்னையும் இழந்து
காணும் கண்களேயாகிவிட்டது?