ஓநாய்க் குலத்திடமிருந்து…
ஓநாய்க் குலத்திடமிருந்து
ஒரு குழந்தை உருவினை வந்தடைந்து
மனிதனை நெருங்கி
அவன் கைபிடித்து
வழிகாட்டிபோல் நடந்துவரும்
இந்தக் காரியம்
யாருடைய செயலாய் இருக்கக் கூடும்?
காலம்?
இன்னும் எவ்வளவு காலம்தான் காத்திருப்பது?
காலம் அவசியமா?
கண்ட ஒரு கணம் போதாதா?