Wednesday, October 25, 2023

இனி ஒரு விதி செய்வோம்!

பிச்சா பாத்திரம் ஒன்றில் மட்டும்தான்
வந்து நிரம்புகிறது
வறுமையும் போரும் துயர்களுமில்லா
உலகைப் படைக்கும்
ஒரே வழியும் ஒளியும் உண்மையும்
ஆற்றலுமான
ஒரே பெருஞ்செல்வம்!

”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
செகத்தினை அழித்திடுவோம்” எனும்
கொதிப்பு நிலைகள் கூடித் திரண்டதா அது?
திரளாமற் போகுமோ அது?
”இனி ஒரு விதி…” என்றால்
அது என்ன விதி எனக் கண்டோமா?

கண்டு விட்டோம் தானே?



கவிதை உருவாகியது: அக்டோபர் 2023.
”இனி ஒரு விதி செய்வோம்!” கவிதைத் தொகுப்பிலிருந்து.


  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP