Friday, October 20, 2023

உதிர் இலை

காற்றின் பூ மஞ்சத்தில் புரளும்
வண்ணத்துப் பூச்சியாய்
சிறகடித்துக் கொண்டு இறங்குகிறது
மரத்திலிருந்து ஒர் உதிர் இலை.
கற்றரையோ புற்றரையோ
மண்தரையோ
உயிர்ப்புடனும்
மாறா இனிமையுடனும்தான்
வந்தமர்கிறது அது
மரணத்தையும் வாழ்வையும் நன்கறிந்த
துயரங்களற்ற ஜீவன்!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP