Friday, September 6, 2024

பவளமல்லி


அதிகமும் செயல் வேகம் கொண்ட
ஆளுமை நான்தான் என்றபடி
சிவந்த காம்புடன்
ஒரு வெண்ணிறச்
சுழல்வட்டமாக
நிறுத்தாச் சுழலுடன்
சுழன்று கொண்டிருந்தது
ஒரு பவளமல்லி!

தூண்டியது அவன் இதயத்தை!
சுழற்றி வீசியது!

பேரியற்கைப் பெருவெளியில்
இருப்பதற்கு ஓர் இடம் தேடி
இடம் காணாது
கண்டுகொண்டது காண்
நிறுத்தாச் சுழலுடன்
சுழலுவதே தனது இடம் என்று!

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP