அந்த மரம்தானா இது?
நில்! என்று சொல்லி அவனை
நிற்கவைத்துவிட்டது யார்?
ஒரு மரம்
கொழித்துக் குலுங்கும்
ஆயிரம் ஆயிரம் மலர்களோடு ?
ஒரு மரத்தைக்கூட காணமுடியாத
அன்பில்லாத
இந்த உலகைவிட்டு
திரும்பு திரும்பு
இங்கே திரும்பி நட! என
தன்னை நோக்கி அழைக்கவந்த
அந்த மரம்தானா அது?