ஒரு மனிதனை நம்பி…
மனிதர்களில் வேறுபாடில்லாதபோது
ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்?
ஒரு மனிதனை நம்பி
மிகப் பெரிய பணி
ஒன்றில் இறங்கியாயிற்று
நிறைவேறுமா நிறைவேறாதா-
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும்
மத்தியில் நின்று கொண்டிருக்கிறேன்.
Poet Devadevan
மனிதர்களில் வேறுபாடில்லாதபோது
ஒரு மனிதன்தானே ஒவ்வொரு மனிதனும்?
ஒரு மனிதனை நம்பி
மிகப் பெரிய பணி
ஒன்றில் இறங்கியாயிற்று
நிறைவேறுமா நிறைவேறாதா-
அய்ம்பதுக்கும் அய்ம்பதுக்கும்
மத்தியில் நின்று கொண்டிருக்கிறேன்.
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
வழிநடையில் ஒரு ரயில்பூச்சி
மிதிபட்டு இறந்து கிடந்தது
பார்வையற்ற மனிதனாலல்லவா?
அவன் பார்வையிழந்ததும்
ஏதோ ஓர் சிந்தனையாலல்லவா?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
கொடி உலர்த்தும் ஆடைகளோடும்
வண்ணப் பூந்தொட்டிகளோடும்
ஒளியைத் தவிர
வேறெதையுமே
தேக்கிவிடாத தளத்தோடும்
வானமே தவமெனக் கொண்டிருக்கும்
மொட்டை மாடியின் ஓர் மூலைக்குக்
குடைபிடிக்கிறது மரம்
பலத்த தயக்கத்துடனே.
எவர் தவத்தையும் கலைத்துவிடாமல்
கூர் தீட்டவந்த பணியாளர்களாய்
பறவைகளின் குரல்கள்.
இந்த அதிகாலை வேளையின்
ஆரம்ப ஒலிகளாய்
வலியுணர்த்துவதும்
வழி சுட்டும் சோர்விலா விழிப்பிற்கான
ஆற்றலைப் படைப்பதுமாய்
பறவைகளின் கூட்டொலிகள்!
கவிதையின் மதம் உலாவும்
கடவுளின் ராஜ்ஜியமாய்
முழுநிலாதான் பூக்காதிருக்குமோ
சிரசிலிருந்து எழுந்தே
சிரசைத் தின்றுவிட்ட
விரிந்த கருங்கூந்தல்
அடர்ந்த கார்மேக விசும்பாகிவிடும்போது?
கவிதை வாசிப்பு: கவிநிலவன்
நீங்கள் இக் கவிதையை உங்கள் குரலில் இங்கே வாசிக்கலாம்
நீர் கசியும் கண்களில் காணப்படுவது
தூயவெண் தடாகத்தில் பூத்து மிதக்கும்
கருப்பு அல்லி அல்லவா?
© Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008
Back to TOP