Tuesday, June 7, 2011

ஒரு மலர்

தன் மணம்
இப் பிரபஞ்சவெளியின்
முடிவின்மைவரை
பரவிக் கொண்டிருக்கிறதாய்
முற்றுமுழு உறுதியுடன்
முறுவலித்துக் கொண்டிருந்தது
ஒரு மலர்.

தனக்குக் கிட்டாததாய்
வாடி வருந்தும் மனிதனைச்
செவி மடுத்துச் சொல்லிற்று அது;
“நெருங்கி வா.
ஒருபோதும் விட்டு விடாதே
என் அண்மையை.”

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP